வியாழன், 27 மே, 2010

சார்ல்ஸ் டார்வினும் உயிரின மரமும் (வீடியோ )



'Charles Darwin and the Tree of Life' - என்ன ஒரு பொருத்தமான தலைப்பு! பரிணாமம் என்றவுடன் 'மனிதன் குரங்கிலிருந்து வந்தவன்' என்ற ஒரு வரிச் செய்தித்தான் பலரின் மனதில் வந்து நிற்கிறது. அது எவ்வளவுப் பெரிய அறிவியல் பிரிவு என்பது மறக்கவோ, மறைக்கவோப் படுகிறது.இன்னும் பலர் நினைத்துக்கொண்டிருப்பதுப்போல், பழைய விட்டலாச்சாரியா படங்களில் உருமாருவதுப்போல குரங்கு திடீரென மனிதனாக மாறிவிடவில்லை.

உயிரின வளர்ச்சியை ஒரு மரமாக சித்தரிதுக்கொண்டால், மரம் என்பது வேர்களையும், கிளைகளையும், இலைகளையும் கொண்டதுப்போல,  உயிரினம் பரிணாம வளர்ச்சியின் மூலம், அமினோ ஆசிட்கள் சேர்ந்து, ஒரு செல் உயிரினமாக உருவாகி, பின் அதே ஒரு செல் பல செல் உயிரினமாகி, அவைகள் பன்மடங்குப்  பெருகி, இனப்பெருக்கம் செய்து, தற்போதுள்ள நிலைக்கு வந்துள்ளன. வேர்கள் என்பவை ஓரணு உயிர்களையும், மரத்தின் தண்டுப்பகுதி பல செல் உயிரினங்களையும், கிளைகள் பறவைகள், நீர்வாழ் உயிர்கள், நிலவாழ் உயிர்கள், போன்றவற்றையும், இலைகள் மற்றும் பூக்கள், கனிகள், போன்றவை, இவைகளிலேயே சிறந்த உயிரினத்தையும் குறிக்கும். இங்கேத்தான் மனிதன் இந்த உயிரின மரத்தின் உச்சாணிக்கொம்பில் மமதையுடன் கூடிய பெருமையோடு அமர்ந்திருக்கிறான். ஏறக்குறைய அவனுக்கும் கொஞ்ச கீழே, வேறொரு கிளையில் சிம்பான்சி, உறங்குட்டான், கொரில்லா போன்ற குரங்குவகைகளும், மற்றும் பல்வேறு கிளைகளில் ஏனைய மிருகங்களும் உள்ளன. மனிதனும், குரங்கினமும் ஒரே கிளையிலிருந்து கிளம்பிய, இரு வேறு பழங்கள்.( அல்லது பூக்கள்/ இலைகள்).

இதை இன்னொரு மாதிரியும் கூறலாம்.  ஒரே பேஸ்மேண்டில் கட்டப்பட்ட இரு வீடுகள். ஒன்றில் வசதி அதிகம், ஒன்றில் அதுக் குறைவு. இந்த பேஸ்மென்ட் போடப்பட்டதிலிருந்து, வீடு தற்போதுள்ள நிலைவரையில் கட்டி  முடிக்க ஆன  காலம்தான் கொஞ்ச நீளம். ஒவ்வொரு ஸ்டேஜுக்கும் பலக்கோடி ஆண்டுகள்! இன்னும் முடியவில்லை. இப்போதும்  அது கட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கால சூழ்நிலைகளுக்கேற்ப தேவையுள்ளவை வைத்துக்கொள்ளப்[பட்டு, தேவை இல்லாதவை நிராகரிக்கப்படும். ஒருக்காலத்தில் வீட்டிற்கு புகைப்போக்க பெரிய சிம்னி இருந்தது. பிற்காலத்தில் யாரும் அதை வைத்துக்கொள்ளுவது இல்லை. அதுப்போலத்தான் மனிதனுக்கு வால்! [ என்னங்க வால்... சரிதானே...?  என்ன தருமிசார்... உங்களின் அடுத்த பதிவுக்கு வெய்ட்டிங்!]
இப்படியே இன்னும் ஏதாவது எழுதிக்கொண்டேப் போகலாம். ஆனால் நான் அதற்காக இங்கே வரவில்லை. ஆனால் நான் பார்த்த, பிபிசி வழங்கிய  ' Charles Darwin and the Tree of Life' என்ற  அற்புதக் காணொளியை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். அதுவே எல்லா விளக்கக்களையும் தந்துவிடும். அதிலும் இந்த மரத்தைப் பற்றி, இங்கே  நமக்கு விளக்கப்போவது சர்.டேவிட் அட்டன்பரோ என்றால் சொல்லவும் வேண்டுமோ !


இந்தக் காணொளியில் அட்டன்பரோ மூன்று கேள்விகளை முன் வைக்கிறார். டார்வின் ஏன் இந்தக் பரிணாமக் கொள்கையை உருவாக்கினார்?...., அவர் கூறுவது சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களா?...., சமீபக் காலமாக  இந்தக் கொள்கை ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது?
டேவிட் தன் பயணத்தை டார்வின் தன் சிறு வயதில், உயிரினத் துவக்கம் பற்றி உன்னிப்பாக கவனிக்கத்தொடங்கிய, இங்கிலாந்தின், கென்ட் நகரில் இருந்த அவரின் பண்ணை  வீட்டில் துவக்குகிறார். பின் டார்வின் சிறுவனாக இருந்தபோது, பழங்கால படிமங்களை தேடித்திரிந்த லேசிச்டர்ஷயர் பகுதிக்குச் சென்று திருபி, டார்வின் கல்வி பயின்ற, பின்னர் தானும் மேற்படிப்பு பயின்ற, ஜெனிடிக்ஸ் என்ற புதிய அறிவியலின் கண்களைத் திறந்த, 'DNA Double Helix' என்ற புதிய பாதையை கண்டுப்பிடிக்கப்பட்ட கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தையும் விஜயம் செய்கிறார்.  கடைசியாக தன் பயணத்தை பெருமைவாய்ந்த, லண்டனின் இயற்கை அருக்காட்சியகத்தில் முடிக்கிறார். டார்வினின் புரட்சிகரமான இந்தத்  தொலைநோக்கு கொள்கை, நாம் இப்போது காணும் உலகின் காட்சியை, நாம் ஒத்துக்கொண்டாலும், மறுத்தாலும், எப்படி நிரந்தரமாக மாற்றிவிட்டது என்பதை விவரிக்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, டார்வின், ' நாம் ஒன்றும் இயற்கையின் விதிகளுக்கு அப்பாற்ப்பட்டவர்கள் இல்லை.... அதன்மேல் நமக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது, நாமும், நாம் ஆட்சி செலுத்தும் மற்ற மிருகங்களும் ஒருவகையில் உறவுமுறைதான்!' என அடித்துச் சொல்லுவதும் விளங்குகிறது. ( 'சக மனுசனையே நேசிக்க முடியாத இவர்கள் எல்லாம் எங்கேபோய்.....' என்று யாரோ புலம்புவது கேட்கிறது!]
காணொளியை பார்த்துவிட்டு, கண்டுக்காம போவதற்கு முன்... ஓட்டு போட்டுவிடுங்களேன் நண்பர்களே. இது எல்லோரையும் சேர்ந்தால் உங்களுக்கும் புண்ணியம். பின்னூட்டம்.... ஓகே ....  நன்றி.

மெய்ன் படத்துக்கு முன்னே ஒரு சின்ன சைடு  ரீல் by Dr. Richard Dawkins !



[ Megavideo - 72 நிமிடங்களுக்குப் பிறகு வீடியோ நின்றுவிடும். அப்போது உங்கள் ரூட்டர் / மோடெம்- மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, ஒரு நிமிடம் கழித்து இணைத்து, மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடருங்கள்.]

Charles Darwin and the Tree of Life.....

புதன், 5 மே, 2010

எல்லாவற்றின் கதை : ஸ்டீபன் ஹாகிங்கோடு பிரபஞ்சத்தில்...(வீடியோ)

இந்தியாவில் ஸ்டீபன் ஹாகிங் மறைந்த ஜனாதிபதி K.R. நாராயணனோடு...

இதற்கு முந்தையப் பதிவுகளான 
காலப் பயணம் - ஸ்டீபன் ஹாகிங்கோடு பிரபஞ்சத்தில்... போன்றவைகளின் தொடர்ப் பதிவு இது. பார்க்காதவர்கள் பார்த்துவிட்டு வரலாம்.

மீண்டும் ஸ்டீபன் ஹாகிங் ஒரு அதிரடி வீடியோவுடன் நம்மை சந்திக்கிறார்! இந்த முறை  பிரபஞ்சத்தின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்க்காலம் மற்றும் முடிவு  போன்றவைகளைப்பற்றி நமக்கு தன்னுடைய ஸ்டைலில் விளக்குகிறார்.

எல்லாம் கனவுப்போல், ஒருக் கதைப்போல்  தெரிகிறது. ஒருக்காலத்தில் நிலவில் பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்கிறாள் என்றும், ராகு கேது என்ற பாம்புகள் நிலவை விழுங்குகின்றன  என்றும் கூறிக்கொண்டிருந்தான். (இப்போதும் சிலர் விதண்டாவாததுக்காக கூரிக்கொண்டுத்தான் இருக்கிறார்கள்!) ஆனால் இப்போதுள்ள நிதர்சனம் வேறு. 
அதுப்போல ' அடடா !அன்றே சொன்னார் ஹாகிங்...' என்று எதிர்காலத்தில் எதுகை மோனையோடு யாராவது சொல்லுவதைப் பார்க்க நாம் இருக்கப்போவதில்லை.

ஐந்து பில்லியன் வருடங்களுக்கு பிறகு சூரியனின் வெப்பம் அதிகரித்து பூமியே ஒரு நெருப்புக் கோளமாக மாறி, இன்னும் இரண்டு பில்லியன் வருடங்களுக்கு பிறகு, நமக்கு இதுநாள் வரையில் உயிர் வளர்த்த சூரியன், இருநூறு மடங்காக பெரிதாகி, நம்ம அழகு பூமியை, எம் தந்தையும் தாயும் மகிழ்ந்துக்குலாவிய அற்புத பூமித்தாயை  கபளீகரம் செத்துவிடும்  என்று அவர் சொல்லும் போது  நம் நெஞ்சு கனக்கத்தான் செய்கிறது.

 இதிலிருந்து மனித இனம் தப்பிக்க, மனிதன் பிரபஞ்சத்தில் வேறு இடங்களைத் தேடிப்போகவேண்டும் என்றும் கூறுகிறார். அதற்கான வழிமுறைகளையும் அலசி ஆராய்கிறார்.  அவர் கூறும் விஷயங்களில் நான் எடுத்துக் காட்டியது ஒரே ஒரு விஷயம்தான். நீங்கள் தான் பார்க்கப்போகிறீர்களே. ஏதோ ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படம் பார்பதுப் போல இருந்தாலும், விஞ்ஞானப்பூர்வமாக சாத்தியமானதையே கூறியுள்ளார். 



இதுவரையில் கூறாத கடவுள் பற்றிய கருத்தை இந்த முறை வெளிப்படையாக கூறியுள்ளார். நீங்களே சென்று பாருங்கள். உங்களின் நிலை அவரின் கருத்தை  எதிர்த்தா அல்லது ஆதரித்தா என்று பின்னூட்டமிடுங்கள்.