புதன், 14 ஜூலை, 2010

வாழும் வரலாறு: ஃபிடல் காஸ்ட்ரோ.



சேவும் காஸ்ட்ரோ ...



[நமது வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தி, நம்மை ஊக்கப்படுத்திய நண்பர் நாஞ்சில் பிரதாப் அவர்களுக்கும் வலைச்சர பொறுப்பாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும்,வாழ்த்துக்களும் !
மனதில் பட்டதை சொல்லும் நண்பர் அபுதாபி கண்ணன் அவர்களுக்கும் நன்றிகள் பல!]



ஃபிடல் காஸ்ட்ரோ ! வாழும் வரலாறு ! அவரை க்யூபா நாட்டின் முன்னாள் சர்வதிகாரி என்று வர்ணிக்கிறது விக்கிப்பீடியா. 1926 இல் பிறந்த ஃபிடல் அலேஜன்ரோ கேஸ்ட்ரோ ருஸ், தொழிலால் வழக்கறிஞரான இவர், ஒருப் புரட்சியாளராக உருவெடுத்து, தன் நண்பனான 'சே' என்று உலகமக்களால் இன்றும் அன்போடு அழைக்கப்படும், உலகின் ஹீரோக்களுக்கெல்லாம் ஹீரோவான, எனெஸ்டோ சே குவேரா மற்றும் தற்போதைய ஜனாதிபதி, சகோதரன் ரவுல் கேஸ்ட்ரோ போன்ற பல ' உண்மையான, நம்பிக்கையான, உணர்வுள்ள, மானமிகு ' தோழர்களின் துணையோடு, பேடிஸ்டா தலைமையில் இயங்கிய முதலாளித்துவ சர்வதிகார அரசிடமிருந்து, சூதாட்டம், கேளிக்கை, விபசாரம், மற்றும் மாபியாக்கள் மயங்கிகிடந்த க்யூபாவை மீட்டு, கம்யுனிச ஆட்சியை நிறுவி, இன்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும்  ஒரு கிழட்டுச் சிங்கம்! என்னதான் வயதானாலும் சிங்கம் சிங்கம்தானே! 
13.07.2010 அன்று எடுக்கப்பட்டப் படம்....

அவர் என்றுமே உலகிற்கு ஒரு சர்ச்சைக்குரிய மனிதராகவே தென்பட்டார். அவருடைய நாட்டு மக்களின் ஒருப்பிரிவினர் அவரை ஒரு க்யூபாவை சீரழிக்கவந்த ராட்சசன் என்றும் மற்றொரு பிரிவினர் அவரி முதலாளித்துவ அராஜகங்களிளிருந்து தங்கள் நாட்டை மீட்கவந்த தீர்கதரிசி என்றும் போடுகின்றனர். நம் ஒவ்வொருவருக்கும் அவரைப்பற்றி பல்வேறுக் கருத்துக்கள் இருக்கலாம். ஆனாலும் நம்ம கண்முன்னாடி சுற்றிக்கொண்டு இருக்கும் பல நம்மநாட்டு தலைவர்களை அவருடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஒத்துக்கொண்டாலும், ஒதுக்கொள்ளவில்லைஎன்றாலும், அவர் வானாளாவி நிற்பது என்னவோ நிஜமான உண்மை!அதை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில்  இங்கே அவரைப் பற்றிய இரண்டு நீண்டக்  காணொளிகளைக் காணப்போகிறோம். ஒவ்வொன்றும்  காணக்கிடைக்காத காட்சிகள் நிறைந்த வரலாற்றுப் பெட்டகங்கள்!  அவைகளை காணும் முன்னே அவரைப் பற்றி சில சுவாரசியமான சிலத் தகவல்கள்.....


மரடோனாவின் காலில் மாமனிதனின் உருவம்..


  • இங்கிலாந்து ராணிக்கும், தாய்லாந்து அரசருக்கும் அடுத்தபடியாக, ஒரு நாட்டின் நீண்டகால தலைவராக திகழ்ந்தவர் காஸ்ட்ரோ .
  • இரண்டு கின்னஸ் ரேக்காடுகளை தன் வசம் வைத்துள்ளார். அனல் தெறிக்கும் பேச்சாற்றல் கொண்ட இவர், 29.09.1960 அன்று, ஐநா மாமன்றத்தில் மிக நீண்ட உரையான 4 மணி 29 நிமிட சொற்பொழிவை  நிகழ்த்தினார்! அதற்கும் மேலாக, 1986 ஆம் வருடம், ஹவானாவில் நடந்த கம்யுனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் அவர் பேசிய நேரம், 7 மணி நேரம், 10 நிமிடங்கள்!
  • இதுவரையில் அவரை  634 முறை கொல்ல முயற்சி செய்யப்பட்டுள்ளது! விஷ மாத்திரைகள், விஷ சுருட்டு, உணவுப்பொருட்கள், போல பல வகையில்...! அட... அவரின் பிரசித்திப் பெற்ற தாடியின் ரோமத்தை கொட்டவைக்க ஏதோ பவுடர் கூடக் கொடுக்கப்பட்டதாம்! ஆனால் அதில் ஒன்றுக்கூட உதிரவில்லை! 'என்னா சின்னப்பிள்ளத்தனம் பாருங்க?'  
  • அவரை க்யூபாவின் தலைமைப் பொறுப்பிலிருந்தும், ஏன் உலகத்திலிருந்தேயும் கிளப்பிவிட முயற்சி நடந்த காலத்தினுடே அவர் ஒன்பது அமெரிக்க ஜனாதிபதிகளக் கடந்து வந்துள்ளார்!
  • சுருட்டின் புகைப்பதில் மிகவும் பிரியமாக இருந்த காஸ்ட்ரோ, 1985 வருடம் முதல் சுத்தமாக புகைப்பதை நிறுத்திவிட்டார்! இப்போது அந்த சுருட்டுக்கு ஒரு சிறந்த உபயோகமாக அவர் எல்லோரிடமும் சொல்லுவது..... எதிரிக்கு பரிசாகக் கொடுப்பது!
  • காஸ்ட்ரோ  வளர்த்துவந்த உப்ரே பலன்கா( அர்த்தம்: வெள்ளைப் பால்மடி!) எனும் பசு, தினமும் 110 லிட்டர் பால் கறக்குமாம்!
  • காஸ்ட்ரோவிற்கு  எட்டுப் பிள்ளைகள். இரண்டு மனைவிகள். முதல் மைவிக்குப் பிறந்த மகளான அலினா பெர்னாண்டிஸ், 1993 ஆம் வருடம், அரு சுற்றுலாப் பயணிப் போல் மாறுவேடத்தில் க்யூபாவை விட்டுத் தப்பி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்து, மயாமி நகரின் வானொலியில், தன் தந்தையின் ஆட்சியை விமரிசித்து நிகழ்சிகள் நடத்தி வருகிறார்!
  • இரண்டாவது மனைவி டாலியாவை சந்தித்து வாழ ஆரம்பித்தது 1961 இல். சத்தமில்லாமல் திருமணம் செய்துக்கொண்டது 1980 இல்!
  • ஜனவரி 31, 2007 இல் அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு கவலைக்கிடமாக இருந்தப் போது, அமெரிக்காவின் மயாமி நகரில், அவர் இறந்தால் அதை விமரிசையாகக்  கொண்டாட திட்டம் தீட்டி இருந்தனர். அதிலும் அவர் மண்ணைப் போட்டுவிட்டார்!
  • காஸ்ட்ரோ  சிறு வயதில் ஒரு தீவிர கத்தோலிக்கர். ஆனால் பிறகு அவர் ஒரு நாத்திகராக மாறிவிட்டார். 1962 ஜனவரியில் அப்போது போப்பாக இருந்த ஜான் XXIII அவரை கத்தோலிக்க பிரிவை விட்டு நீக்கிவிட்டார். அதற்காக அவர் கவலைப்படவில்லை. இருந்தும் போப் ஜான் பால் II, 1998 இல் க்யூபா வந்தபோது, அவரை தனியே நெடுநேரம் சந்தித்துப் பேசினார். அது மட்டுமல்லாமல், ஏப்ரல் 2005 இல் அவர் இறந்தப் போது அவரின் நினைவு பிராத்தனையிலும் கலந்துக்கொண்டார். 

  • மேலும் தெரிந்துக்கொள்ள வேண்டுமா.... இங்கே....

6 கருத்துகள்:

http://rkguru.blogspot.com/ சொன்னது…

பதிவு அருமை........வாழ்த்துகள்

balakrishna சொன்னது…

மிக மிக அருமையான பதிவு நண்பா
உங்கள்
பாலா
மதுரை

kannan சொன்னது…

arumaiyana pathivu. valam pera vazhtukkal. spaecial thanks of inroducing my blog. http://samykannan.blogspot.com/

kannan
Abu dhabi

kannan சொன்னது…

enakku piditha castrovai pattri pathuvu ittathukku nantri mattrum vaalthukkal. speacial thanks to inroducing my blog http://samykannan.blogspot.com/

best regards

kannan
abu dhabi

Unknown சொன்னது…

Nice! wishes!! :)

Unknown சொன்னது…

good post on castero
http://www.healthdurbar.com