புதன், 12 அக்டோபர், 2011

இந்தியா : புலிகளின் இராட்சியம் !




[வேலைப்பளுவின் காரணமாக நீண்ட நாட்களாக பகிர்வுகளை வெளியிட
முடியாமல் போனதற்காக 'என்ன...எதுவென்று...?! ' ஒருவரும் 
கேட்ட்கவில்லைஎன்றாலும் :-) , நண்பர் ரோம் நகர் செல்வராஜிடம் நான் 
மன்னிப்புக் கேட்டே ஆகவேண்டும்! நண்பரே... நலமா?]

இந்தமுறை பகிரப்போவது 2002 இல் வெளிவந்த, 'இந்தியா : புலிகளின் 
இராட்சியம் !' (India: The Kingdom of Tigers!) என்ற ஆவணப்படம். சும்மா 
கேட்டாலே அதிரும்படியானத் தலைப்பு இல்லே ....! நானாக வைக்கவில்லை,
தானாக அமைந்துள்ளது!





ஜிம் கார்பெட் ! இந்தியப் புலிகளுக்கு வேலியாக மாறிய வேட்டைக்காரன்! 
அவர் எழுதிய ' Man-Eaters of Kumaon' என்ற புத்தகத்தை அடிப்படையாகக் 
கொண்டு படைக்கப்பட்ட ஒரு அருமையான காணொளி. அவர் பிறந்து 
வளர்ந்த இமய மலைச்சாரலில் உள்ள குமாவுன் பளைப் பிரதேசங்களில் 1900 
முதல் 1930 வரை வாழ்ந்த மனிதர்களை கொன்று தின்ற புலிகளையும் 
சிறுத்தைகளையும் வேட்டையாடிக் கொன்ற அவரின் அனுபவங்களைப் 
பற்றிய புத்தகம். இந்தப் புத்தகத்தில் புலிகளைப் பற்றி மட்டுமல்லாமல், 

அந்தக்கால இந்தய வாழிக்கை முறையைப் பற்றியும், இந்திய 
கிராமங்களைப்பற்றியும் அழகாக எடுத்துக் கூறியுள்ளார். நாம் காணப்போகும் 
இந்த காணொளியிலும் இவைகள் எல்லாம் அருமையாகத் 
தெளிக்கப்பட்டுள்ளது.      

அவரைப்பற்றி மேலும் படிக்க சில சுவாரசியமான பக்ககங்கள்... இங்கே 

1936 ஆண்டு ஜிம் கார்பெட் முயற்ச்சியால் தொடங்கப்பட்ட இந்தியாவின் 
முதல் தேசியப்பூங்காவான ஹெய்லி தேசியப்பூங்கா, பின்பு ராம்கங்கா 
தேசியப்பூங்கா என்று பெயர்மாறி, கடைசியாக 1957 இல் ஜிம் கார்பெட் 
தேசியப்பூங்கா என்று அழைக்கப்பட்டு அவருக்கு கவுரவம் செய்யப்பட்டது.

இந்தப் படத்தை இயக்கியவர் Bruce Neibaur. இசை அமைத்தவர் Michael Brook

இந்தப் படத்திற்கான இசையைக் கேட்க அவரின் இசைத்தளத்திற்கு 
செல்லவும்.
IMAX இல் இவர்கள் அளித்துள்ள இந்தப் படைப்பு என்னைக் கவர்ந்ததுப்போல உங்களையும்  கவரும் என்பதில் ஐயமில்லை!


விடியோவை  720p HD செலக்ட் செய்துக்கொண்டு பார்க்கவும்.....
மீண்டும் சந்திப்போம்....


6 கருத்துகள்:

பொன் மாலை பொழுது சொன்னது…

நானும் முன்பு போல அதிகம் இங்கு வர முடிவதில்லை. தேடிப்படிக்கும் ஒரு சில பதிவர்களின் பக்கம் கூட போக முடிவதில்லை. பணிச்சுமைதான்.
மீண்டும் வந்ததில் மகிழ்ச்சியே. தொடருங்கள்.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் சொன்னது…

நன்றி கக்கு... இசை ஞானியின் இன்னிசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தீர்களா?

பொன் மாலை பொழுது சொன்னது…

பின்னணி இசையும், ஒலிப்பதிவும் நெஞ்சை அள்ளும் படக்காட்சிகளும் பிரமிக்கவைகின்றன.
பலரும் அறிய இங்கு அளித்ததற்கு மிக்க நன்றி எட்வின்.

நான் எந்த இசை விழா நிகழ்சிகளுக்கும் சென்றதே இல்லை. தோன்றியதும் இல்லை. இங்கு துபாயில் கூட நம்மவர்களின் இசை நிகழ்சிகள் நடக்கும், செய்திகளை படிப்பதோடு சரி, சென்று வர தோன்றியதே இல்லை.ஆயரம் பேருடன் இருந்து ஆரவாரமாக ரசிக்கலாம். ஆனால் தனிமையில் இருந்து இசையை ரசிக்கும் அனுபவமே எனக்கு பிடித்த ஒன்று.

பொன் மாலை பொழுது சொன்னது…

Michael Brook அவர்களின் வலைதள அறிமுகத்துக்கு மீண்டும் ஒரு நன்றி எட்வின். உங்களுக்கு மட்டும் எப்படி வித்யாசமான தளங்கள் கிடைகின்றன? இந்திய இசையின் பெருமையை உணர்த்தும் அற்புதம் நிகழ்கிறது இங்கே.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் சொன்னது…

உண்மை....!

பொன் மாலை பொழுது சொன்னது…

அடக்கடவுளே! என் படங்கள் எப்போது உடைந்துபோனது? :))

kakkoo.sattanathan@gmail.com


தங்களின் அன்புக்கு மிக்க நன்றி.