வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

படைத்ததினால் இவனும் இறைவன் !



"I never perfected an invention that I did not think about in terms of the service it might give others....Of all my inventions I liked the phonograph best.... I am proud of the fact that I never invented weapons to kill...."
                                                                                                        Thomas A Edison.


1847 ஆம் வருடம். பெப்ரவரி மாதம் பதினோராம்  தேதியில், ஆல் இன் ஆல் அழகு ராஜாவான (தொழிலில்) தந்தைக்கும், ஆசிரியத் தாய்க்கும், ஏழாவது மகனாகப் பிறந்தவர்தான் நம்ம படைப்புலக பிதாமகன் தாமஸ் ஆல்வா எடிசன்! 84 வருடங்கள் வாழ்ந்த இவர், சாகும்போது இவர்  பெயரில் இருந்தது 1,093 கண்டுப்பிடிப்புகளுக்கான பட்டயங்கள் ! அவனவன் ஒன்றுமே இல்லாமல் என்னப்போடு போடுகிறான்?! நமக்கு இவ்வளவு கண்டுப்பிடிப்புகள் மூலம் நன்மை செய்துவிட்டுச் சென்ற இவரைப்பற்றி நம்மில் எத்தனைப் பேருக்கு முழுமையாகத் தெரியும்?

அவரின் கண்டுப்பிடிப்புகளில் மிகமுக்கியமானவை என்று, மின்சார பல்ப்,
 ஃ போனோக்ராம் எனப்படும் ரிக்கார்ட் பிளேயர், புகைப்படக் கருவி, மற்றும் நம்ம தமிழர் வாழ்வை வளமாக்கும்  சினிமாவை உருவாக்கும் திரைப்படக் கேமராவும் அடங்கும். முழு லிஸ்ட் வேண்டும் என்பவர்கள் இங்கே செல்லவும்.

சமீபத்தில் அவரைப் பற்றிய சில விடியோக்களைக் காண நேர்ந்தது. அதை உங்கள் அனைவருடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவலால் இந்தப் பதிவு.












"...I am proud of the fact that I never invented weapons to kill...."
                                                                                                        Thomas A Edison.

என்றுக் கூறிய எடிசன் சிக்கலில்....
எடிசன் எடுத்த சலனப்படங்கள்....
எடிசனும் டாப்சி யானையும்.... இந்தக் கதைத் தெரியுமா?

பார்க்க படிக்க... ஒன்று,  இரண்டு  மூன்று   நான்கு