வியாழன், 17 டிசம்பர், 2009

பிபிசிஇன் உயிரினங்கள்: பாகம் 9 (வீடியோ)

சென்ற வீடியோக்களை பார்க்காதவர்களுக்காக ....

பாகம் 1 ' சவாலே சமாளி'- ' Challenges of Life '

பாகம் 2 ' ஊர்வன: உண்மைகள்' - ' Reptails and Amphibians '

பாகம் 3 ' பாலூட்டிகள்' - ' Mammals '

பாகம் 4 ' பறவைகள் ' - ' Birds '

பாகம் 5 ' மீன்கள் ' - ' Fish '

பாகம் 6 ' வேட்டை ' - ' Hunter and Hunted '

பாகம் 7 ' ஆழ்கடலின் அதிசயப்பிறவிகள் ' - ' Creatures of the Deep '

பாகம் 8 ' தாவரங்கள் ' - ' Plants '

இப்பொது ' நம்ம சொந்தங்கள்  ' - ' Primates '


செவ்வாய், 15 டிசம்பர், 2009

நிலா... நிலா... ஓடிப்போ !




நிலவு எதற்காக ? வெறும் கவிஞர்கள் பாடல்களில் உபயோகப்படுத்திக் கொள்ளவா? இரவில் வழிக்காடவா? அல்லது சோசியர்கள் நம் எல்லோருடைய எதிர்காலத்தையும் கணித்து, உலகிற்கு பேருதவி செய்யவா? இல்லை ராகு கேது என்ற பாம்புகள் பசியாறவா ?
 ('வால் பையனின் - சோதிடமும், சந்திரனும் ! '   பக்கத்துக்கு ஒரு நடை  சென்று, அங்கு நடந்த வாதப், பிரதிவாதங்களைப் பார்க்காதவர்கள், முதலில் பார்த்துவிட்டு  வரவும். )


வருங்காலத்தில் மத்தநாடுக்காரன் நிலவை வைத்து  பல பிசினஸ் பிளான் போட்டுவைத்திருந்தாலும், நம்ப ஆட்கள் ரொம்பகாலத்துக்கு முன்னமே நிலாவைக் காண்பித்து காசு பண்ண ஆரம்பித்து விட்டார்கள்! ஆனா மொளகா அரைத்தது என்னமோ நம்ம ஆளுங்க தலைமேலத்தான். சரிப்போகட்டும் . உண்மையாகவே இந்த நிலவு முக்கியம் வாய்ந்ததா? நம்மூர் டுபாக்கூர் விஷயங்களை தள்ளுபடி செய்துவிட்டு, விஞ்ஞானப்பூர்வமாக நிலவை அணுகலாமா?  அதற்கு  நம்ம பழைய   'நிலவு....பூமியின் தோழி ' என்றப்பதிவு உள்ளது.
சரி இந்த நிலவே இல்லாமல் இருந்தால் என்ன? அதற்க்கு பதில், இன்னொரு பதிவான ' நிலவில்லா பூமி' உள்ளது. பார்க்காதவர்கள் பார்த்துக்கொள்ளலாம்.
தற்போது, அதேப்போல நிலவு 'அப்சென்ட்' ஆனால்என்ன கதி என்று இன்னொரு வீடியோவை பார்க்க  நேர்ந்தது. ஏகப்பட்ட விஷயங்களை உள்ளடக்கிய இந்த அருமையான வீடியோவை உங்களிடமும் பகிர்ந்துக்கொள்ளுகிறேன்.  எப்படி என்று கூறுங்கள். 


சில நிலாத்துளிகள்....
  • வயசு 4.5 பில்லியன் வருஷம், எடை 73,490,000,000,000,000 மில்லியன் கிலோ!
  • வடிவம் : லைட்டா  கோழி முட்டை வடிவம்!
  • நம்ம பூமியில் இருந்து  3 ,84,467 கி மீ. தூரத்தில் உள்ளது.
    கார்ல போனா 130 நாளு, ராக்கெட்ல போனா 13 அவரு(hr.), Light கணக்கா போனா 1.52 நொடி!
  • சுற்றளவு 3476 கி மி. கார்ல சுத்தி வந்தா 4 நாள் ஆகும்.
  • பூமியும் நிலாவும் ஒரே ரேஞ்சில் சுத்துவதால், நாம நிலாவின் ஒரே சைடத்தான் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்!
  • பூமி சின்ன வயசா இருந்தப்போது, நிலா 3 மடங்கு பெரிசா தெரிந்ததாம். ஏன்னா அப்போ கொஞ்சம் கிட்ட இருந்தது. அனா இப்போ ' நிலவுக்கு என் மேல் என்னடிக் கோபம் ? ' என்பதுப்போல் கொஞ்ச கொஞ்சமாக விலகி செல்லுகிறது!
  • நிலாவில் எந்த மண்டலமும் கிடையாது. எந்த 'gas' ஆக இருந்தாலும், அது 'பூட்ட கேஸ்தான் !' ஏன்னா அதன் ஈர்ப்பு சக்தி ரொம்ப வீக்கு!
  • அங்க காத்து, கருப்பு, தண்ணி எதுவும் இல்லாததனால், 3 பில்லியன் வருஷத்துக்கு முந்தி எப்படி இருந்ததோ, ஒரு மண்ணும் மாறாமல் அப்படியே இருக்கிறது. நம்ம ஆள் போய்த்தான் கொஞ்சம் கலைத்து விட்டு வந்துள்ளான். மறுபடியும் போய்க் கலைக்கவில்லை என்றால், 1969 இல் அவன் விட்டு சென்ற 'காலடி', குறைந்தப்பட்சம் இன்னும் 11 மிலியன் வருடங்கள் வரை அப்படியே இருக்கும்.
  • பசிபிக் பெருங்கடலின் ஏரியாவும், நிலாவின் பரப்பளவும் ஏறக்குறைய சேம்!
  • அமெரிக்கா பல இடங்களில் தன் கோடியை நாட்டி இருந்தாலும், நிலவை எந்த நாடும் சொந்தம் கொண்டாட முடியாது.
  • சூரியக் குடும்பத்தில் பல கிரகங்களுக்கு சொந்த நிலவு இருந்தாலும், நம்ம நிலவு 'Moon' , மற்றவை ' moon' !
  • நிலவு இதுவரை 12 மனிதர்களால் மிதிப்பட்டுள்ளது.
  • வழக்கமாக வருடத்துக்கு 12 முழுநிலவுகள் வரும். இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நாட்கள் சேர்ந்து விடுவதால் 13 முழுநிலவும் ஏற்படும். இது எப்பவாவது வருவதால் இதை ' Blue Moon' என்று அழைக்கிறார்கள். இதிலிருந்துதான் ' Once in a Blue Moon' (எனக்கு பின்னூட்டங்கள் வரும்) என்ற நக்கல் வார்த்தை தோன்றியது.
  • Dr. Eugene Shoemaker, பூகோள விஞ்ஞானி, நிலவுக்கு சென்ற விண்வெளி வீரர்களுக்கு ,நிலவில் உள்ள பள்ளங்களை (Craters) பற்றி பாடம் எடுத்தவர். அவரின் நீண்ட நாள் கனவான விண்வெளிப் பயணத்தையும், நிலவில் நடைபயணம் செய்யும் ஆர்வத்தையும், தன் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இழந்தார். ஆனால் அவரின் கடைசி விருப்பமான அவரின் சாம்பல், அந்த நிலவின் பள்ளங்களில் தூவப்பட்டது!  
  • இதுவரை நிலவிலிருந்து 382 கிலோ நிலவுப்பாரைகள் எடுதுவரப்பட்டுளன.
  • உங்க எடை இங்கே 82 கிலோவா? அப்போ  நிலவில் வெறும் 14 கிலோத்தான்! (எடை குறைக்க விரும்புவோர் அங்கே சென்று விடலாம்!)
சரி நண்பர்களே, படம் தொடங்கப் போகிறார்கள். பாத்துட்டு வாங்க, அப்புறம் பேசலாம்.

திங்கள், 14 டிசம்பர், 2009

பிபிசிஇன் உயிரினங்கள் : பாகம் 8 (வீடியோ)


சென்ற வீடியோக்களை பார்க்காதவர்களுக்காக ....


பாகம் 1 ' சவாலே சமாளி'- ' Challenges of Life '

பாகம் 2 ' ஊர்வன: உண்மைகள்' - ' Reptails and Amphibians '

பாகம் 3 ' பாலூட்டிகள்' - ' Mammals '

பாகம் 4 ' பறவைகள் ' - ' Birds '

பாகம் 5 ' மீன்கள் ' - ' Fish '

பாகம் 6 ' வேட்டை ' - ' Hunter and Hunted '

பாகம் 7 ' ஆழ்கடலின் அதிசயப்பிறவிகள் ' - ' Creatures of the Deep '


இப்போது ' தாவரங்கள் ' - ' Plants '

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

பிபிசிஇன் உயிரினங்கள் : பாகம் 7 (வீடியோ)


சென்ற வீடியோக்களை பார்க்காதவர்களுக்காக ....

பாகம் 1 ' சவாலே சமாளி'- ' Challenges of Life '

பாகம் 2 ' ஊர்வன: உண்மைகள்' - ' Reptails and Amphibians '

பாகம் 3 ' பாலூட்டிகள்' - ' Mammals '

பாகம் 4 ' பறவைகள் ' - ' Birds '

பாகம் 5 ' மீன்கள் ' - ' Fish '

பாகம் 6 ' வேட்டை ' - ' Hunter and Hunted '

இப்போது ' ஆழ்கடலின் அதிசயப்பிறவிகள் ' - ' Creatures of the Deep '


புதன், 2 டிசம்பர், 2009

உயிருள்ள உடலுக்குள்ளே...! [Updated]



பெரிய படிப்பு படித்த டாக்டரெல்லாம் இங்கு வராதிங்க. இது  சாதாரண மனிதருக்கு. ஆமாங்க. நம்ப உடம்புக்குள்ள ஒவ்வொரு வினாடியும் என்னென்ன நடக்கிறது என்றுப் பார்ப்போமா?  பிறந்து, நாம அழும் முதல் அழுகையிலிருந்து, வளர்ந்து வயசாகி, கடைசி மூச்சு விடும் வரை நம்ம உடலில் அப்படி என்னத்தான் நடக்குது?

நம் வாழ்நாளில் சுமார் 700 மில்லியன் முறை சுவாசிக்கிறோம்!
நாம தினமும் சாப்பிடும் சாப்பாடு சுமார் 30 மீட்டர் நம் உடலில் பயணப்படுகிறது தெரியுமா?
ஒவ்வொரு நிமிடமும் நம் உடலில் இருந்து சுமார் 30,000 இறந்த சரும செல்கள் உதிர்கிறது! ஒரு வருஷத்துக்கு இரண்டு கிலோ!
நம் உடலில் உள்ள ரத்த நாளங்களின் நீளம் சுமார் 37,000 மைல்கள்!
சாதாரணமாக ஒரு பெண்ணின் உடலில் 17 சதுர அடி தோல் இருக்கும். ஒன்பது மாத கர்ப்பிணிக்கு 18.5 வரை அதிகரிக்கும்.
மெதுவாக வளரும் விரல் நகம், பெருவிரல். வேகமாக வளருவது நடுவிரல் நகம்.
நம் வாழ்நாளில் நாம் சுமார் 10,000 கேலன்கள் உமிழ்நீர் (ஜோ..) சுரக்கிறோம்!
நாம் புன்னகைக்க 5 முதல் 53 முகத்தசைகள் வேலை செய்ய வேண்டும். ஆனால் கோபப்பட்டு சிடுமூஞ்சியாக இன்னும் அதிகமாக தேவைப்படுமாம்! ஆகவே எது சுலபமோ அதைமட்டும் செய்வோம்.
சரி . போதும்  வாங்க படம் பார்க்கலாம்.


திங்கள், 30 நவம்பர், 2009

பிபிசிஇன் உயிரினங்கள் : பாகம் 6 (வீடியோ)


சென்ற வீடியோக்களை பார்க்காதவர்களுக்காக ....

பாகம் 1 ' சவாலே சமாளி'- ' Challenges of Life '

பாகம் 2 ' ஊர்வன: உண்மைகள்' - ' Reptails and Amphibians '

பாகம் 3 ' பாலூட்டிகள்' - ' Mammals '

பாகம் 4 ' பறவைகள் ' - ' Birds '

பாகம் 5 ' மீன்கள் ' -  ' Fish '

இப்போது...... ' வேட்டை! '   Hunter and Hunted!

புதன், 25 நவம்பர், 2009

'பிக் பேங்' மெஷின் / LHC .[Updated]




உலகின் மிகப்பெரிய இயந்திரமான LHC எனப்படும் Large Hadron Collider சில நாட்களுக்கு முன் 'மீண்டும்' இயக்கப்பட்டது. இது முதன் முதலில் சென்ற வருடம் ( 10/09/08 ) அன்று இயக்கப்பட்டது. ஆனால் ஒன்பது நாட்களுக்கு பிறகு, அதன் காந்தங்களில் ஏற்ப்பட்ட (£ 24 மில்லியன் செலவு வைத்த: சுமார் 1,85,42,94,240 இந்திய ரூபாய்கள்!) பழுத்தால், கடந்த ஒரு வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த பரிசோதனையைப் பற்றித்தெரிந்த, இரண்டுப்பிரிவாக நிற்கும் மக்கள், இந்தப் பழுதை, இரண்டு விதமாக எடுத்துக்கொண்டனர். 'Fortunate & Unfortunate!'. அதாவது 'அதிஷ்டவசமாக & துரதிஷ்டவசமாக' என்று இரண்டு விதத்தில் எடுத்துக்கொண்டனர். "துரதிஷ்டவசமாக LHC இயந்திரம் பழுதடைந்தது!" என்று கூறுபவர்கள், அங்கு வேலை செய்யும் விஞ்ஞானிகளும், 'இந்த பரிசோதனை, மனித இனத்தின் மிகப்பெரும் சாதனை' என்று நினைப்பவர்களும்தான்.

ஆனால் " நல்லதுடா சாமி,  அதிஷ்டவசமாக பழுதடைந்து, நின்றுப்போனது" என்று மகிழந்தவர்கள், ' இந்த பரிசோதனை, மனித இனத்திற்கு பட்டுமல்ல, இந்த முழுப் பிரபஞ்சத்திற்கே சாவு மணி அடிக்கக்கூடியது' என்று நடுநடுங்கி நிற்பவர்கள்.

நாமும் இந்தப் பிரபஞ்சத்தின், பூமிக்கிரகத்தின் உறுப்பினர்கள் என்பதால், ஏதாவது ஒரு பக்கம் நின்றே ஆகவேண்டும். அதற்கு முன், இதைப்பற்றி கொஞ்ச விவரம் தெரிந்துக்கொள்ளவேண்டும். இதற்க்கு முன்பே பலர் இந்த சமாச்சாரத்தைப்பற்றி எழுதிவிட்டனர். இப்போது இந்தப் பதிவு, அவைகளையெல்லாம் பார்க்காதவர்களுக்காக.


சரி. எதுக்காக இவ்வளவு செலவில், இவ்வளவு பெரிய இயந்திரம்? இது இப்ப நேத்து விஷயம் இல்லை. விஞ்ஞானிகளின் ரொம்பநாள் கனவு. இந்தப் பிரபஞ்சம் உருவான நொடி எப்படி இருந்திருக்கும்? இந்த பிரபஞ்சத்தை உருவாக்கிய துகள்கள் (particles) எவை? அதை உள்ளே இருக்கும் ரகசியங்கள் என்ன? நிறை எனப்படும் mass, அதனுள்ளே பொதிந்திருக்கும் ரகசியங்கள் என்ன? இதுவரை யார்கண்ணிலும் படாத Higgs Particals என்றழைக்கப்படும் ' கடவுள் துகள்களைப்' பார்க்க முடியுமா? நம்ம பிரபஞ்சத்தை உருவாக்கி அதைக் கட்டுக்குள்ளோ, கட்டுக்குள் அடங்காமல் வளர்துக்கொண்டேப்போகும் 'கரும்பொருள்' என்றழைக்கப்படும் 'dark matter'ஐப் பற்றி அறிந்துக்கொள்ள முடியுமா?.... இன்னும் இதுப்போன்ற மிகப்பெரிய கேள்விகளுக்கு விடைத் தெரியும்(?) என்ற நம்பிக்கையில்தான் இவ்வளவு ஆர்பாட்டங்கள், முயற்சிகள், கஷ்டங்கள் மற்றும் செலவுகள்!

சுவிஸ் மற்றும் பிரெஞ்சு நாடுகளின் எல்லையில், ஜெனிவா நகரின் அருகில், 27km சுற்றளவுள்ள சுரகப்பாதையைக் கொண்டது இந்த மகா இயந்திரம். இந்தப் பாதை, நிலத்தடியில் 100 m ஆழத்தில் அமைந்துள்ளது. இந்த பரிசோதனையில் அணுத்துகள்களான ப்ரோட்டான்களை (Protons), மோதவிட்டு வேடிக்கைப் பார்ப்பதுத்தான் முக்கிய வேலை.(நம்ம ஊர்ல சிலர்  பரோட்டாவை மோதவிடுகிறார்கள் என்று கேள்வி! ) ஆனால் அவைகள் எப்படிப்பட்ட சூழ்நிலையில் மோதவேண்டும் என்பதில்தான் இந்த பரிசோதனை இந்த அளவிற்கு பூதாகர உருவைப் பெறுகிறது. மனிதன் நிலவிற்கு போனதுக் கூட பெரிய விஷியமில்லை என்றால் பாருங்களேன். இந்தத்துகள்கள் எதிர்ரெதிர் திசையில், 27 km வட்டப்பாதையில் சுற்றி மோதிக்கொள்ள ( ஒரு செகெண்டுக்கு 600 மில்லியன் இடி!), அவைகள் போகவேண்டிய வேகம் 'ஒளியின் வேகம்'! அதாவது மணிக்கு 1079 மில்லியன் கிலோ மீட்டர்கள்.( கண் இமைக்கும் நேரத்தில் 299792.458 km தூரம் செல்லவேண்டும்!). ஆகவே ஒரு நொடியில், இந்த 27 km வட்டப்பாதையை 11,245 முறை சுற்றிவந்துவிடும்! அதனால் துகள்களை அத்தகைய வேகத்திற்கு தயார்ப்படுத்த ஒரு ' வேக ஊக்கி ' ( Accelerator ) இயந்திரத்தின் சுற்றளவு மாத்திரம் 26,659 m ! அதனுள்ளே மிகவும் சக்திவாய்ந்த 9,300 காந்தங்கள் உள்ளன ! இந்தக் காந்தங்கள் 'ரொம்பக் கூலாக' இருக்கவேண்டும். அதாவது, முதலில் 10,080 டன் திரவ நைட்ரஜன் கொண்டு, - 193.2 C வரை குளிரூட்டப்பட்டு, மீண்டும் 60 டன் திரவ ஹீலியம் உபயோகித்து இன்னும் கீழே - 271.3 C வரை மகா,மெகா சில்லாகப்படும்! ( உலகின் மிகப்பெரிய, சக்திவாய்ந்த ஃ பிரிட்ஜ்! நம்ம சாதா ஐஸ் கட்டி 0 C ! இது வின்வேளியைவிட கூல்! ) இவ்வளவு கூல் பண்ணியும், இந்தத்துகள்கள் மோதிக்கொள்ளும்போது ஏற்படும் வெப்பம் எவ்வளவு தெரியுமா? சூரியனின் நடு சென்டரில் உள்ள சூட்டைவிட ஒரு லட்சம் மடங்கு சூடு அதிகம்! கற்பனை செய்யவேண்டாம். முடியாது! நமது சூரிய குடும்பத்து ஏரியாவிலேயே பக்கா வெற்றிடம் இதுத்தான். ( 10^-13 atm !) நிலவில் உள்ள அழுத்ததை விட பத்து மடங்கு குறைவானது! ( சில மனிதர்களின் தலையை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அவர்கள் மன்னிக்கவும்.)

இந்த மோதல்கள் நான்கு கண்களால் ( Detectors) கண்காணிக்கப்படும். அவ்வாறு ஒரு வருடம் கிடைக்கப்படும் தகவல்கள் 15 million gigabite அளவிற்கு இருக்கும் என்று கருதப்படுகிறது. இதற்காக உலகம் முழுதும் 80,000 கம்ப்யுட்டர்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவைகளில் உள்ள தகவல்களை சிடிக்களில் நிரப்பி, அவைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்தால், சுமார் 20 km உயரம் வரைப் போகும்! (ஆனால் இதிலே ஒரு பர்சென்ட் விஷயமே உபயோகப்படும் என்பது வேறு சமாச்சாரம்!).
அட்லஸ் என்ற டிடக்ட்டாரில் உள்ள கேபிள் ஒயர் மாத்திரம் 3000 km நீளம்!  இங்கு பணிப்புரியும் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை சுமார் 5000 ! 15 வருட ஆயுள் கொண்ட இந்த இயந்திரம், சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாகப் பட்டது. ( ரிப்பேர் செலவு தனி! ). இவையெல்லாம் சுமார் 13.7 வருடங்களுக்கு முன்னால் 'பிக் பேங்' எனப்படும் பிரபஞ்ச பிறந்ததினத்தில், பிறந்தக்கணத்தை உருவாக்கி, அதன் ரகசியங்களை கண்டுப்பிடிப்பதுத்தான். மேலும் சொல்லுவதென்றால் இன்னும் பல மகத்துவங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இதைப்பற்றிய BBC நிறுவனம் தயாரித்த ஒரு காணொளி உள்ளது. அதைப் பார்த்தால் எல்லாம் நமக்கு தெரியவரும். பார்ப்போமா?












Brian Cox "CERN's 27km Big Bang machine" (Lift07... by liftconference




சனி, 21 நவம்பர், 2009

பிபிசிஇன் உயிரினங்கள் : பாகம் 5 (வீடியோ)


சென்ற வீடியோக்களை பார்க்காதவர்களுக்காக ....


பாகம் 1 ' சவாலே சமாளி'

பாகம் 2 ' ஊர்வன: உண்மைகள்'

பாகம் 3 ' பாலூட்டிகள்'

பாகம் 4 ' பறவைகள் '

இப்போது ' மீன்கள் ' ..........


புதன், 11 நவம்பர், 2009

பிபிசிஇன் உயிரினங்கள் : பாகம் 4 (வீடியோ)


சென்ற வீடியோக்களை பார்க்காதவர்களுக்காக ....

பாகம் 1 ' சவாலே சமாளி'

பாகம் 2 ' ஊர்வன: உண்மைகள்'

பாகம் 3 ' பாலூட்டிகள்'

தற்போது ' பறவைகளின் அட்டகாசங்கள்!'



வெள்ளி, 30 அக்டோபர், 2009

பிபிசிஇன் உயிரினங்கள் : பாகம் 3 (வீடியோ)





சென்ற வீடியோக்களை பார்க்காதவர்களுக்காக ....

பாகம் 1   ' சவாலே சமாளி'

பாகம் 2  ' ஊர்வன: உண்மைகள்'

இப்போது ... பாகம் 3 ' பாலூட்டிகள்' .....

செவ்வாய், 20 அக்டோபர், 2009

பிபிசிஇன் உயிரினங்கள் : பாகம் 1- சவாலே சமாளி. (வீடியோ)



             பிபிசி   நிறுவனம் உலகின் நம்பர் ஒன்  ஒளிப்பரப்பு நிறுவனம்! ஏன் ? இதுபோல  போன்ற உலக மக்களுக்கு சிறந்த தொண்டினை வேறு யாரால் செய்ய முடியும். இரண்டு வாரங்களுக்கு முன் ஒளிப்பரப்பப்பட்ட இந்த காணொளியை பற்றி இங்கு பாராட்டாதவர்களேக்  கிடையாது. சர்.டேவிட் அட்டன்பரோ அவர்களின் அருமையான வர்ணனையில், என்ன ஒரு அட்டகாசமான புத்தம்புதிய  காணொளியைப் படைத்துள்ளனர்! இது இன்னும் பத்து வாரங்களுக்கு தொடருமாம்! கிடைத்ததை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ளுகிறேன். இனி வரும் இதன் தொரட்சிப் பதிவுகளுக்கு முன்னோட்டம் கிடையாது. நேரே வீடியோத்தான். கருத்துக்கூறவும். வோட்டும் போடவும்.


செவ்வாய், 1 செப்டம்பர், 2009

400 வருட தொலைநோக்கியின் கதை (வீடியோ)


தொலைநோக்கி உருவாக்கப்பட்டு 400 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், உலகம் அதைக் கொண்டாடிக்கொண்டுள்ளது. நாமும் அதைக் கொண்டாட வேண்டாமா? ஆகவே நான் சமிபத்தில் பார்த்து ரசித்த ' 400 Years of Telescope' என்ற காணொளியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுகிறேன். நீங்களும் கண்டு, மற்றவர்களும் காண மறக்காமல் ஓட்டுப் போடுங்கள்.. மற்றும் கருத்தும் கூறுங்கள். நன்றி.





கலிலியோ கலிலி: வாழ்க்கைப் பதிவு (வீடியோ)


கலிலியோ கலிலி ! பரிச்சயமான பெயர். இத்தாலி நாட்டின் , பிசா நகரம், சாய்ந்த கோபுரம், தொலைநோக்கி இவைகளை நினைத்தாலே அவரின் நினைவுதான் வரும். தற்காலத்தில் இத்தாலி என்றாலே வேறு நினைவுகளும் வரலாம்! ஆனால் இது வானவெளி ஆராய்ச்சியின் தந்தை என்றழைக்கப்படும் கலிலியோவின் வாழ்க்கையைப் பற்றிய வீடியோப் பதிவு. இந்த வீடியோவின் பெயர் ' Galileo's Battle for Heavens' என்பதாகும்.

இதற்கு முன்னுரை எழுத நினைத்துக் கொண்டிருந்தப்போது, கனடா நாட்டினைச் சேர்ந்த ஒருப் பள்ளியின் வலைத்தளத்தை பார்த்தேன். அதில் கலிலியோவைப் பற்றி அந்தப் பள்ளியின் மாணவர்கள் செய்திருந்த ஒரு ப்ராஜெக்ட் என்னை மிகவும் கவர்ந்திருந்திருந்தது. Very simple and Best! ஆகவே அதையே உங்களின் முன் வைத்துள்ளேன். கீழுள்ள சுட்டியைச் சொடுக்கினால் அந்தப் பக்கங்களுக்குச் செல்லலாம். பார்த்து முடித்தும் வீடியோக்களை கண்டு களியுங்கள். மிகவும் நேர்த்தியாக அவருடைய வாழ்கையை படமாக்கியுள்ளனர். நீங்களும் பார்த்து, வோட்டு போடுவது மூலமாக மற்றவர்களுக்கும் பரிந்துரையுங்கள், முக்கியமாக மாணவர்களுக்கு. நன்றி.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

பிரபஞ்சத்தை சுற்றும் பயங்கரங்கள்! : BLACK HOLES (updated)







[இன்று 10/04/2019 முதன் முதலில் கருந்துளையின் நிஜப் புகைப்படம் வெளியிடப்பட்டது. அந்தப்படங்களைச் சேர்த்து, 2009 ஆகஸ்ட்டில் போட்ட இந்தப் பழைய பதிவை தூசுத் தட்டி, தம்பி ரோஜர் விவேக் வேண்டுகோளுக்கிணங்க அவரின் பார்வைக்கு... 😊 ]

இந்த ஊரிலேயே மோசமான ரௌடி யார் என்று கேட்டால் யாரவது ஒருவரின் பெயரை சொல்லுவோம்! உலகிலேயே அதி பயங்கரமான அழிவாயுதம் எதுவென்றால் அணுவாயுதம் போன்ற ஏதோவொன்றை சொல்லக்கூடும்! ஆனால் மனிதன் அறிவுக்கெட்டாத, ஏன் கற்பனைக்கும் எட்டாத, இந்த உலகத்தில் மட்டும் அல்லாமல், இந்தப் பரந்து விரிந்த பிரபஞ்சத்திலேயே மிகவும் பயங்கரமான அழிவுச் சக்தி எதுவென்றுக் கேட்டால், நடுக்கத்துடன் சொல்லவேண்டிய பதில் ' Black Holes ' என்று அழைக்கப்படும் ' கருந்துளைகள் ' அல்லது ' கருங்குழிகள் ' என்பதே.
என்னப்பா ஓவர் பில்டப் கொடுத்து இப்படி பயப்படுகிறாய்? அப்படி என்ன விபரீதம் உள்ளது? என்று சிலர் கேட்பது தெரிகிறது. ஐயா... திமிங்கலத்தின் வாயிலே சிக்கியவர்கள் கூடத் திரும்பலாம். ஆனால் இந்தக் கருந்துளைக்கு அருகில் சென்றவர்கள் சென்றவர்கள் அட்ரெஸ் இல்லாமல் போவார்கள்.  நாம் என்ன?... ஜுஜுபி! இந்த ஊர்... ! இந்த நாடு...! இந்த பூமி...! இந்த சூரியன்..! இதுப்போல எது வழியில் வந்தாலும் விழுங்கி ஸ்வாகா செய்துவிடும்! பந்தாப் பண்ணிக்கொண்டுத் திரியும் தனி மனிதனோ,...ஜாதியோ...மதமோ... கட்சியோ...அரசாங்கமோ... எல்லாம் கணக்கிலேயே வராது! உள்ளே என்ன நடந்தது என்று சொல்லவும் முடியாது. ஏனென்றால் போனவர்கள் வந்தால்தானே! இதற்க்கு மேல் யாரயாவது திட்ட வேண்டுமென்றால் ' Go to Hell..' என்பதற்கு பதிலாக ' Go to black Hole ' என்றோ, நம்மவூர் தாய்குலங்களின் வழக்கப்படி ' உன்ன Black Hole வந்து விழுங்க !' என்றும் திட்டலாம். Really worth it!



சரி, இந்தக் கருந்துளைகள் எப்படி உருவாகின்றன என்று சிம்பிள்ஆகப் பார்ப்போமா? சூரியனைவிட மிகப்பெரிய நட்சத்திரங்கள், 'சூப்பர்ஜயன்ட்' ( supergiant) என்று கூறுவார்கள். அவைகள் எரியப் பயன்படும் ஹைட்ரஜன் வாயு காலியாகும்போது , அதன் வெப்பத்தை இழந்து கூலாகச் சாகத்தொடங்கும். இதை 'சூப்பர்நோவா ' (supernova) என்றழைப்பர். அதன் சக்தியை இழந்தப்பின் அதன் சுயக்கவர்ச்சி விசையால் (garvitational pull) தன்னில் தானே புதைந்துப் போகிறது. எப்படி என்றால், 13,92,000 km diameter அளவுடைய ஒரு லட்டை( நாம் சாப்பிடும் இனிப்பான லட்டு) , அதை 3 km diameter அளவுடைய லட்டாக அம்முக்கவேண்டி இருந்தால், எப்படிப் பட்ட சக்தி தேவைப்பட்டு இருக்கும்? அதுதான் அந்த கருந்துளையின் ஈர்ப்பு விசை! கற்பனை செய்யமுடியாத garvitational force! அப்படியே ஒரு புள்ளியாக மறைந்துப்போகும். அது மற்றவைகள் மீது ஏற்படுத்தும் தாகத்தை வைத்தே அதன் இருப்பை அறிந்துக் கொள்ள இயலும்.

மனிதனுக்கு தெரிந்து ஒளித்தான் மிக வேகமாகச் செல்லக்கூடியது. ஆனால் அதுவும் கருந்துளையில் இருந்துத் தப்பமுடியாது! நம் பூமியில் இருந்து வான்வெளிக்கு, நம் புவியீர்ப்பு விசையை தாண்டிச் செல்ல வினாடிக்கு 11 km வேகத்தில் சென்றால் போதும் மேலே சென்று விடலாம். சூரியனில் இருந்து விடுப்பட வினாடிக்கு 600 km வேகத்தில் செல்லவேண்டும். ஒளியின் வேகம் வினாடிக்கு 3,00,000 km. ( மூணு லட்சம் கிலோ மீட்டர் ஐயா!) ஆனால் இந்த ஒளியே கருந்துளையில் இருந்து தப்பிக்கப் போதாது! என்னக் கொடுமை சார் இது!
இந்த கருந்துளைகளுக்கு ஒரு எல்லை ஒன்று உண்டு. அதை 'ஈவன்ட் ஹாரிசான்' (event horizon). இதை ' point of no return ' என்றும் அழைப்பர். 'திரும்ப முடியாத ஒரு வழிப் பாதை!'

இந்தகருந்துளைக்குள் நாம் விழுந்தால் என்னவாகும்? அதை பேராசிரியர் நீல் டீக்ராஸ் டைசன் விளக்குவதைப் பாருங்க...





முதலில் நுழைந்தவுடன் மரணம் நிச்சயம்!. முதலில் நம் கால்கள் உள்ளே நுழைகிறது என்று வைத்துக் கொண்டால், நம் தலைமேல் ஏற்படும் ஈர்ப்பு விசையைவிட நம் கால்களில் பல ஆயிர மடங்கு ஈர்ப்பு விசை இருக்கும்! நம் கால்கள் இழுக்கப் பட்டு ஜாவ்வு மிட்டாய் போல பல கிலோ மீட்டர் நீளத்துக்கு இழுக்கப் படுவோம்! பற்பசை ஒரு டியூபில் இருந்து பிழியப்படுவதைப்போல் பிழியப் படுவோம்! மற்றும் ஒரு உடல் இரண்டாகப் பிய்க்கப் பட்டு, அந்த இரண்டு நான்காக, நான்கு எட்டாக, எட்டு பதினாறாக .... இப்படி பலுகிப் பெருகுவோம்! உலகத்தில் ஜனத்தொகை பெருக்குவோரை இதில் தூக்கிப் போடவேண்டும்! இன்னொரு விஷயம் கூட உண்டு! நம் கரும்துலையை நெருங்கும் போது நம் தலையின் பின்பக்கத்தை நாமே நம் கண்களால் பார்க்க முடியும்! என்னக் கண்றாவி இது? இதை 'ஐயின்ஸ்டின் வலயம்' என்றுக் கூறுகிறார்கள். எப்படி என்றால் கருந்துளையின் ஈர்ப்பு விசை நம் பின்பக்கம்  உள்ள ஒளியையும் ஈர்த்து நம் கண் முன்னே காணச் செய்துவிடும் என்று சொல்லுகிறார்கள்! எல்லாம் அறிவியல் புனை கதைப் போல உள்ளது அல்லவா? நிஜமாகவே இன்னும் நிறைய உள்ளது!

கீழுள்ள காணொளிகள் இவைகளைப்பற்றி இன்னும் தெளிவாக விளக்கும் என்று நம்ம்புகிறேன்.







எனக்குப் பிடித்த இந்த Men in Black திரைப்பட இறுதிக்காட்சி... உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்...




சனி, 15 ஆகஸ்ட், 2009

மீண்டும் DR. நீல் டி கிராஸ் டைசன் : வானவியல் சொற்பொழிவு.




சென்றப் பதிவிலேயே Dr. டைசைனைப் பற்றி கூறிவிட்டதால் இம்முறை நேராக வீடியோவிற்கு சென்றுவிடுவோம். என்ன நண்பர்களே. சென்ற சொற்பொழிவு சுவாரசியமாக இருந்ததா? இந்தமுறையும் இவர் அனைத்து விஷயங்களையும் போட்டுத் தாக்கியுள்ளார். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். அதற்க்கு நான் பொறுப்பு! என்ன, சென்ற பதிவை எல்லோரும் பார்த்துள்ளீர்கள், வோட்டும் போட்டுளீர்கள். ஆனால் பின்னூட்டம் தான் இல்லை. இந்தமுறையாவது உங்களின் கருத்துக்களை சொல்லுவீர்களா? நன்றி நண்பர்களே!


































செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

பிரபஞ்சத்தின் பிதாமகன் : பேரா.ஸ்டீபன் ஹாகிங்.



(13/08/௦9 , ஸ்டீபன் ஹாகிங் அவர்களுக்கு அமெரிக்காவின் உயரிய ஜானாதிபதி விருது அளிக்கப் பட்டுள்ளது.


லைட்டா தலைவலி,... லேசா ஜுரம்,... என்ன பாடுபடுகிறோம்? மற்றவர்களை என்னப் பாடு படுத்துகிறோம்?! ஆனால் கடந்த 56 வருடங்களாக பேராசிரியர். ஸ்டீபன் ஹாக்கிங்கிக்கு வெறும் சிந்திக்க மட்டுமே முடியும். பேசவோ, கைக் காலை அசைக்கவோ முடியாது! ஆனால் அவரின் சாதனைகளைச் சொல்லிமுடியாது. வாழும் அதிசயம் அவர். அனேகமாக அவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இருந்தாலும் இந்தப் பதிவில் அவரைப் பற்றி மீண்டும் ஒருமுறைப் பார்ப்பதில் தவறொன்றுமில்லைத்தானே?

சரியாக கலிலியோ இறந்து 300 வருடங்களுக்குப் பிறகு பிறந்தார்.(8/1/42). ஊர், படிப்பிற்குப் பேர்போன, இங்கிலாந்தின் பல்கலைக்கழக நகரமான, ஆக்ஸ்போர்டு நகரம், தந்தை பிரான்க் ஹாகிங், தாய் இசபெல் . மூத்த மகனான இவருக்குப் பின் இரண்டு தங்கைகள் மற்றும் ஒரு வளர்ப்புத் தம்பி. அவரின் சிறுவயதில் இருந்தே ஒரு விஞ்ஞானி ஆவதக்கான அறிகுறிகள் அவரிடம் தென்பட்டன. மருத்துவரான தந்தையின் விருப்பத்திற்கு மாறாக, அவர் கணிதத்திலும், இயற்பியலிலும் தன் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். அது ஏனோ தெரியவில்லை, அவர் முதலில் சேர்க்கப் பட்டது பெண் பிள்ளைகளுக்கான பள்ளியில் யான். பின்பு தன் 8 வது வயதில் வேறுப் பள்ளிக்கு மாற்றப்பட்டார். பள்ளியில் அவர் சுமாரான மாணவனாகத்தான் இருந்தார். சக மாணவர்கள் அவரை ' ஐன்ஸ்டின்' என்று பெயர் வைத்துக் கூப்பிட்டனராம். படிப்பில் நிறைய கவனம் செலுத்தாமலே கணிதத்தில் மிகவும் திறமைப் பெற்றவராகத் திகழ்ந்தார். பின்பு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தன் பட்டப் படிப்பை முடித்தார். அங்குத்தான் அவர் ஐன்ஸ்டின் வழங்கிய சார்புக்கொள்கையிலும் ( General Theory of Relativity ) க்வாண்டம் கொள்கையிலும் ஈர்க்கப்பட்டு அவைகளில் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். பின்பு கேம்ப்ரிட்ஜ் பல்கலையில். சேர்ந்து தான் மேற்படிப்பைத் தொடர்ந்தார்.

1962 ஆம் வருடத்தில் தான் அந்த பேரிடி அவரைத் தாக்கியது. குணமாகவே முடியாத நரம்புச் சம்பந்தமான நோயான 'amyotrophic lateral sclerosis' (motor neuron disease) அவரைத் தாக்கியது. அது அவரை ஒரு சற்கர நாற்காலியில் முடக்கிப் போட்டது. அவரும் அதற்கான மேம்போக்கு மருத்துவ சிகிச்சையை மேற்க்கொண்டார். அதைத் தொடர்ந்து 1965 வருடம் ஜேன் வைல்ட் என்றப் பெண்ணைத் திருமணம் செய்துக் கொண்டார். அந்தத் திருமண வாழ்க்கைதான் தனக்கு வாழவேண்டும் என்ற எண்ணத்தையும், வாழ்ந்து நிறைய சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தையும் தந்தது என்று பின்னாளில் கூறி இருந்தார். ஆனால் 1991 ஆம் வருடம் அவரின் வளர்ந்து வரும் புகழினாலும், மேலும் சிக்கலாகும் உடல்நிலையாலும் ஏற்ப்பட்ட மன அழுத்தத்தால் இருவரும் பிரிந்தனர். அப்போது அவர்களுக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளை. ஆனால் மூவரும் தன் தந்தையிடமே வளர்ந்தனர்.1985 ஆம் வருடம் அவருக்கு ஏற்ப்பட்ட நிமோனியாக் காய்ச்சலால் உயிருக்குப் போராடிய அவருக்கு பேசும் சக்தியும் போனது. அங்கேதான் திருமதி.எலைன் மேசன் அவர் வாழ்க்கையில் தோன்றினார். அவரின் கணவர் டேவிட் மேசன் தான் ஹாக்கிங்கின் பிரபலமான குரல் ஒலியை கணினி மூலம் வடிவமைத்தவர். அவரின் மனைவியான எலைன், ஹாகிங்க்சின் செவிலியாக சிறப்பாகப் பணிப்புரிந்து அப்படியே அவரின் மனைவியாகவும் மாறினார். ஆனால் அந்த வாழக்கை அவருக்கு மனதாலும், உடலாலும் மிகவும் துன்பத்தைத் தந்தது என்றே கூறவேண்டும். உலகமே போற்றும் விஞ்ஞானி, ஒரு குழந்தை போன்று தன் அடிப்படைத் தேவைகளைக் கூட செய்துக்கொள்ள முடியாத ஒரு பாவப்பட்ட மனிதர், தினமும் தன் அலுவலகத்துக்கு வெட்டுக்காயங்களோடு, சிறு சிறு சிராய்ப்புகளோடு, தன் சக்கர நாற்காலியில் கண்கலங்க வரும் பரிதாபத்தை பார்த்தவர்கள் மனம் கலங்கினர். பின்பு 2006 இல் ஒருவழியாக அந்த புண்ணியவதியிடமிருந்து விவாகரத்து வாங்கிக் கொண்டார் ஹாகிங். தற்போது அவரும் அவரின் முதல் மனைவியும் ஒன்றாக உள்ளார்கள் என்று தெரிகிறது.(ஆதாரம்: dailymail.co.uk - 20/10/06)

அவரின் உலகப் புகழ்ப்பெற்ற புத்தகமான ' A Brief History of Time ' என்ற புத்தகம் 1988 ஆம் வருடம் வெளிவந்து, நம் இந்திய நகரங்களின் நடைப் பாதை புத்தகக் கடைகளிலும் சக்கைப் போடுப் போட்டது நினைவிருக்கலாம். எல்லோரும் புரிந்துக் கொள்ளக்கூடிய நடையில் அருமையாக, அள்ளித் தெளித்த நகைச்சுவை உணர்வோடு படைத்திருப்பார். இப்போதும் தாமதமில்லை, படிக்காதவர்கள் கட்டாயம் படித்துப் பாருங்கள்.

இவர் வாழும் காலத்தில் நாமும் வாழுகிறோம் என்று பெருமிதம் கொள்ளுவோம். நம் இளைய சமுதாயத்திற்கு அவரை ஒரு எடுத்துக்காட்டாகக் கொள்ளச் செய்வோம்











A Brief History of Mine என்ற தலைப்பில் அவரின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு காணொளி...



அவரின் சாதனைப் படைத்த புத்தகமான ' A Brief History of Time ' ஐ அடிப்படையாகக் கொண்டு படமாக்கப்பட்ட இந்த விடியோ என்னை மிகவும் கவர்ந்த ஒன்று... அதை நீங்களும் பார்க்க இங்கே பகிர்ந்துக் கொள்ளுகிறேன்...


திங்கள், 10 ஆகஸ்ட், 2009

DR. நீல் டி கிராஸ் டைசன் : நம்பிக்கைக்கு அப்பால்....


[முதலில் 'தொடர்ந்து எழுதுங்கள்' என்று ஒற்றை வரியில், பின்னூட்டங்கள் இல்லாததால், விஞ்ஞானப் பதிவுகளை கிடப்பில் போடவிருந்த என்னை, ஊக்கப்படுத்திய நண்பர் சதீஷ் மற்றும் அகஸ்டின் இருவருக்கும் நன்றி. மற்றும் தமிளிஷ் & தமிழ் 10 tamil2k, gilli, vimalind, vinaiooki,puspaviji, jacobmile, tharun, vgopi, nanban2ky tamilnenjam, mounakavi, spice74, kvadivelan, jagadeesh, boopathi, ashok92,subam, paarai,abragam போன்று வோட்டுப் போட்டு ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் நன்றிகள்.]


சரி. இந்த பதிவிற்கு வருவோம்.'BEYOND BELIF'. இது ஒரு விஞ்ஞான சொற்பொழிவு! திகில் அடைய வேண்டாம்! நிச்சியமாக போர் அடிக்காது. ஏனன்றால் அதை அளிப்பவர் அப்படிப் பட்டவர். Dr. Niel deGrasse Tyson. அமெரிக்காவின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின், வானவியல் பிரிவின் முதல் கறுப்பின இயக்குனர்! ஏகப்பட்ட பட்டங்களையும் விருதுகளையும் பெற்றவர்.சிறந்த நகைச்சுவை உணர்வுக் கொண்டவர். People Magazine மூலம், 'வாழும் மிகவும் கவர்ச்சியான வானவியல் வல்லுநர்' என்று 2000 அம வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டவர். Discover பத்திரிக்கை மூலமாக 2008 ஆம் வருடம் 'உலகின் தலைச் சிறந்த 50 அறிவியல் வல்லுனர்களில்' ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். Time பத்திரிக்கையின் உலகின் 100 மிகப் பிரபலமானவர்களில் ஒருவராக 2007 ஆம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த மல்யுத்த வீரர்! மற்றும் சிறந்த நடனக் கலைஞர்! ஏகப்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகளையும் புத்தகங்களையும் எழுதிஉள்ளார். தொலைகாட்சி நிகழ்சிகள் அவரை மிகவும் பிரபலமாகிவிட்டன. நாசாவின் முக்கிய மூளைகளில் ஒருவர். அதன் மிகப்பரிய விருந்தான பொதுச் சேவைக்க விருதைப் பெற்றவர்.
கடைசியாக, நவக்ரகங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட புளுட்டோவை, சூரியக் குடும்ப உறுப்பினர்ப் பட்டியலில் இருந்து துரதியவர்களில் இவர் மிகவும் முக்கியமானவர்
இப்படிப் பட்டவர் என்னப் பேசினாலும் சுவாரசியமாக இருக்கும் அல்லவா? இந்த நிகழ்சியில் மற்றொரு அறிவியல் ஜாம்பவான் Dr.ரிச்சர்ட் டாகின்ஸ் பார்வையாளர் வரிசயில் அமர்ந்து சொற்பொழிவை ரசிப்பது, இந்த நிகழ்சியின் வீரியத்தை உணர்த்தும். வாருங்கள் நண்பர்களே நாமும் அமர்ந்து நோக்குவோம். மறக்கமால் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். அடுத்தப் பதிவில் சந்திப்போம்.







திங்கள், 20 ஜூலை, 2009

ஏற்கனவே நிலவில் வேற்று கிரகவாசிகளா ?



' புதுசு புதுசா யோசிக்கிராய்ங்களே' என்று வடிவேல் புலம்புவதுத்தான் ஞாபகம் வருகிறது. நிலவில் ஏற்கனேவே வேறு ஒரு நாகரீகம் இருக்கலாம் என்று புதிய சந்தேகத்தை கிளப்பிவிட்டிருக்கிறார்கள் 'Moon raising' என்ற இந்த விவரணப் படத்தை எடுத்தவர்கள். எல்லா நாடுகளும், முக்கியமாக அமெரிக்க நாடும் பொதுமக்களை இந்த விஷயத்தில் மோசடிச் செய்கின்றன என்று குற்றம் சாட்டுகின்றார்கள். அவர்கள் கூறும் காரணங்களும் யோசிக்கவேண்டிய விஷயங்களாகத்தான் இருக்கின்றன.

Part I

MOON RISING from John Baselmans on Vimeo.

Part II

UFO: THE GREATEST STORY EVER DENIED II: MOON RISING from Awaken Consciousness on Vimeo.

ஞாயிறு, 19 ஜூலை, 2009

BLACK HOLES - பிரபஞ்சத்தின் பயங்கரங்கள். (வீடியோ)


உங்க ஊரிலேயே மிகவும் மோசமான ரௌடி யார் என்றால் யாரவது ஒருவரின் பெயரை சொல்லுவோம்! உலகிலேயே அதி பயங்கரமான அழிவாயுதம் எதுவென்றால் அணுவாயுதம் போன்ற ஏதோவொன்றை சொல்லக்கூடும்! ஆனால் மனிதன் அறிவுக்கெட்டாத, ஏன் கற்பனைக்கும் எட்டாத, இந்த உலகத்தில் மட்டும் அல்லாமல், இந்தப் பரந்து விரிந்த பிரபஞ்சத்திலேயே மிகவும் பயங்கரமான அழிவுச் சக்தி எதுவென்றுக் கேட்டால், நடுக்கத்துடன் சொல்லவேண்டிய பதில் ' Black Holes ' என்று அழைக்கப்படும் ' கருந்துளைகள் ' அல்லது ' கருங்குழிகள் ' என்பதே. என்னப்பா இப்படி பயப்படுகிறாய்? அப்படி என்ன விபரீதம் உள்ளது? என்று சிலர் கேட்பது தெரிகிறது. ஐயா... திமிங்கலத்தின் வாயிலே சிக்கியவர்கள் கூடத் திரும்பலாம். ஆனால் இந்தக் கருந்துளைக்கு அருகில் சென்றவர்கள் சென்றவர்கள்தான். அட்ரெஸ் இல்லாமல் போவது எனபது இதைத்தான்! நாம் என்ன?... ஜுஜுபி! இந்த ஊர்... ! இந்த நாடு...! இந்த பூமி...! இந்த சூரியன்..! இதுப்போல எது வழியில் வந்தாலும் விழுங்கி ஸ்வாகா செய்துவிடும்! பந்தாப் பண்ணிக்கொண்டுத் திரியும் தனி மனிதனோ,...ஜாதியோ...மதமோ... கட்சியோ...அரசாங்கமோ... எல்லாம் கணக்கிலேயே வராது! உள்ளே என்ன நடந்தது என்று சொல்லவும் முடியாது. ஏனென்றால் போனவர்கள் வந்தால்தானே! இதற்க்கு மேல் யாரயாவது திட்ட வேண்டுமென்றால் ' Go to Hell..' என்பதற்கு பதிலாக ' Go to black Hole ' என்றோ, நம்மவூர் தாய்குலங்களின் வழக்கப்படி ' உன்ன Black Hole வந்து விழுங்க !' என்றுத் திட்டலாம். Really worth it!

சரி, இந்தக் கருந்துளைகள் எப்படி உருவாகின்றன என்று சிம்பிள்ஆகப் பார்ப்போமா? சூரியனைவிட மிகப்பெரிய நட்சத்திரங்கள், 'சூப்பர்ஜயன்ட்' ( supergiant) என்று கூறுவார்கள். அவைகள் எரியப் பயன்படும் ஹைட்ரஜன் வாயு காலியாகும்போது , அதன் வெப்பத்தை இழந்து கூலாகச் சாகத்தொடங்கும். இதை 'சூப்பர்நோவா ' (supernova) என்றழைப்பர். அதன் சக்தியை இழந்தப்பின் அதன் சுயக்கவர்ச்சி விசையால் (garvitational pull) தன்னில் தானே புதைந்துப் போகிறது. எப்படி என்றால், 13,92,000 km diameter அளவுடைய ஒரு லட்டை( நாம் சாப்பிடும் இனிப்பான லட்டு) , அதை 3 km diameter அளவுடைய லட்டாக அம்முக்கவேண்டி இருந்தால், எப்படிப் பட்ட சக்தி தேவைப்பட்டு இருக்கும்? அதுதான் அந்த கருந்துளையின் ஈர்ப்பு விசை! கற்பனை செய்யமுடியாத garvitational force! அப்படியே ஒரு புள்ளியாக மறைந்துப்போகும். அது மற்றவைகள் மீது ஏற்படுத்தும் தாகத்தை வைத்தே அதன் இருப்பை அறிந்துக் கொள்ள இயலும்.

மனிதனுக்கு தெரிந்து ஒளித்தான் மிக வேகமாகச் செல்லக்கூடியது. ஆனால் அதுவும் கருந்துளையில் இருந்துத் தப்பமுடியாது! நம் பூமியில் இருந்து வான்வெளிக்கு, நம் புவியீர்ப்பு விசையை தாண்டிச் செல்ல வினாடிக்கு 11 km வேகத்தில் சென்றால் போதும் மேலே சென்று விடலாம். சூரியனில் இருந்து விடுப்பட வினாடிக்கு 600 km வேகத்தில் செல்லவேண்டும். ஒளியின் வேகம் வினாடிக்கு 3,00,000 km. ( மூணு லட்சம் கிலோ மீட்டர் ஐயா!) ஆனால் இந்த ஒளியே கருந்துளையில் இருந்து தப்பிக்கப் போதாது! என்னக் கொடுமை சார் இது!
இந்த கருந்துளைகளுக்கு ஒரு எல்லை ஒன்று உண்டு. அதை 'ஈவன்ட் ஹாரிசான்' (event horizon). இதை ' point of no return ' என்றும் அழைப்பர். 'திரும்ப முடியாத ஒரு வழிப் பாதை!'

இந்தகருந்துளைக்குள் நாம் விழுந்தால் என்னவாகும்??????
முதலில் நுழைந்தவுடன் மரணம் நிச்சயம்!. முதலில் நம் கால்கள் உள்ளே நுழைகிறது என்று வைத்துக் கொண்டால், நம் தலைமேல் ஏற்படும் ஈர்ப்பு விசையைவிட நம் கால்களில் பல ஆயிர மடங்கு ஈர்ப்பு விசை இருக்கும்! நம் கால்கள் இழுக்கப் பட்டு ஜாவ்வு மிட்டாய் போல பல கிலோ மீட்டர் நீளத்துக்கு இழுக்கப் படுவோம்! பற்பசை ஒரு டியூபில் இருந்து பிழியப்படுவதைப்போல் பிழியப் படுவோம்! மற்றும் ஒரு உடல் இரண்டாகப் பிய்க்கப் பட்டு, அந்த இரண்டு நான்காக, நான்கு எட்டாக, எட்டு பதினாறாக .... இப்படி பலுகிப் பெருகுவோம்! உலகத்தில் ஜனத்தொகை பெருக்குவோரை இதில் தூக்கிப் போடவேண்டும்! இன்னொரு விஷயம் கூட உண்டு! நம் கரும்துலையை நெருங்கும் போது நம் தலையின் பின்பக்கத்தை நாமே நம் கண்களால் பார்க்க முடியும்! என்னக் கண்றாவி இது? இதை 'ஐயின்ஸ்டின் வலயம்' என்றுக் கூறுகிறார்கள். எப்படி என்றால் கருந்துளையின் ஈர்ப்பு விசை நம் பிணக்கம் உள்ள ஒளியையும் ஈர்த்து நம் கண் முன்னே காணச் செய்துவிடும் என்று சொல்லுகிறார்கள்! எல்லாம் அறிவியல் புனை கதைப் போல உள்ளது அல்லவா? நிஜமாகவே இன்னும் நிறைய உள்ளது!
இத்தோடு நிறுத்திக்கொண்டு ' Super massive Black Holes ' என்ற வீடியோவைப் பார்ப்போமா?





எனக்குப் பிடித்த இந்தக் காட்சி எந்த திரைப் படத்தில் என்று யாரவது கூற முடியுமா?

வெள்ளி, 17 ஜூலை, 2009

பிரபஞ்ச எல்லைவரை ஒருப் பயணம் (வீடியோ)




Space/Universe என்று அழைக்கப்படும் பிரபஞ்சம் அல்லது அண்டம்ரப எப்படி இருக்கும், எத்தனைப் பெரியது என்று முழுவதுமாக இதுவரை யாரும் கற்பனைக் கூடப் செய்துப் பார்த்திருக்க முடியாது. ஏனென்றால் அதன் பரிமாணங்கள் மனிதனின் தற்போதைய அறிவிற்கு அப்பாற்பட்டவைகள். ஆனால் விஞ்ஞானம் பிரபஞ்சத்தைப் பற்றிய ஒரு துளியளவு விளக்கம் கூற முயன்றிருக்கிறது. இந்த வீடியோவில் அதைப்பற்றிப்  பார்க்கலாம். அதற்க்கு முன் நாம் ஒளி, ஒளிவருடம் போன்றவைகளைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும். (ஒளி, வேகம்,நேரம்  இவைகளைப்பற்றி வேறொரு பதிவில் தனியாகப் பார்க்கலாம்.)
மனிதனின் தற்போதைய அறிவிற்குத் தெரிந்த வரையில் ஒளிதான் (light) மிக வேகமாக பயணிக்கக் கூடியது. அதன் வேகம் ஒரு வினாடிக்கு 299,792,458 கிலோ மீட்டர்கள். அதாவது ஒரு வினாடியில் ஏழு முறை இந்த உலகத்தை சுற்றிவந்துவிடும். கற்பனை செய்துப் பார்க்க முடிகிறதா? இதைப்போல் இதே ஒளி ஒரு வருடம் இதே வேகத்தோட பயணித்தால், எவ்வளவு  payaniththaalpayaniththaal தூரம் செல்லுமோ, அந்த தூரம் தான் 'ஒரு ஒளி வருடம்'. (1 light year). அதாவது மிகச் சரியாக 9,460,730,472,580.8 கிலோமீட்டர்கள்! கண்ணைக் கட்டுகிறது அல்லவா? இந்த ஒளியின் வேகத்தில் சென்றால் 8.32 நிமிடத்தில் சூரியனைச் சென்றடையலாம். 3,76,300 km தூரமுள்ள நிலவை 1.25 வினாடிகளில் சென்றடையலாம். நம்முடைய சூரியக் குடும்பம் இருக்கும் ' பால் வெளி வீதி  மண்டலம்' (சரியா?) Milkeyway galaxy யைக் ஒரு முனையில் இருந்து அடுத்த முனைக்குச் செல்ல ' ஒரு லட்சம் ஒளி வருடங்கள்' ஆகும்! இதுப் போன்ற லட்சக்கணக்கான மண்டலங்கள் உண்டு இந்த பிரபஞ்சத்தில்! அப்படி என்றால் அதன் பிரமாண்டத்தை கற்பனையும் செய்து பார்க்க இயலாது.
சரி இப்போது நாம் நம் பூமியில் இருந்து பிரபஞ்சத்தின் எல்லை வரை ஒரு பயணம் மேற்கொள்ளப் போகிறோம். வழியில் நிறைய ஆச்சர்யங்களையும், அற்புதங்களையும் அதி பயங்கரங்களையும் காண இருக்கிறோம். நான் ரெடி. நீங்க ரெடியா?













இந்த வீடியோவை பார்த்தப் பின், இந்த சிறிய உலகில், மனிதன் பணம்,பதவி,ஜாதி,மத ,இன வெறிக் கொண்டு எப்படியெல்லாம் ஆட்டம் போடுகிறான் என்பதாய் எண்ணிப் பார்க்கும் போது சிரிப்பதா, அழுவதா? என்றுப் புரியவில்லை. இந்த அகண்ட பிரபஞ்சத்தின் முன் அவன் ஒரு தூசுக்குக் கூடச் சமமில்லை என்று எப்போது புரிந்துக் கொள்வான்? பிரபஞ்சத்தின் கால அளவோடு, மனிதனின் வாழ்நாளை ஒப்பிடும்போது கண் இமைக்கும் நேரத்தை விடச் மிகவும் சிறியது என்று என்றைக்குத் தெரிந்துக் கொண்டு அனைவரோடும் அன்போடு இருப்பான்? அந்தக் காலம் வருமா நண்பர்களே?

வியாழன், 16 ஜூலை, 2009

நிலவில்லா பூமி (வீடியோ)

16/07/69



இன்று 16/07/09, மனிதன் நிலவில் காலடி வைத்து 40 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இந்த நாளைப் பற்றித் தெரியாமல் நேற்றே 'நிலவு...பூமியின் தோழி' என்ற வீடியோப்பதிவைப் போட்டுவிட்டேன். What a coincidence?(இதற்க்கு தமிழில் என்ன?). இன்று மீண்டும் அதே நிலவைப் பற்றிய இன்னொரு வீடியோப்பதிவு. என்ன ரொம்ப போர் அடிக்கிறேனா? கொஞ்சம் பொறுத்துக்கொள்ளவும்.எல்லாம் நன்மைக்கே.
இன்று நாம் பார்க்கவிருக்கும் வீடியோ ' If we had no Moon' எனப் பெயர்க் கொண்டது. காண மிக அறிவுப்பூர்வமாகவும் அற்புதமாகவும் படமாக்கப்பட்டுள்ளது. உங்களையும் அந்த அன்பவம் பெற அழைக்கிறேன். இதைப் பார்க்குமுன் இதற்க்கு முந்தைய வீடியோப்பதிவையும் பார்த்துவிட்டால் நலம். இன்னும் நன்றாக விளங்கிக் கொள்ளலாம்.







புதன், 15 ஜூலை, 2009

நிலவு.... பூமியின் தோழி.(வீடியோ)




" நிலவுக்கு என் மேல் என்னடிக் கோபம்..."
" நிலேவே என்னிடம் மயங்காதே..."
" நிலாவே வா..."
"வான் நிலா, நிலா அல்ல..."
" வெள்ளி நிலா முற்றத்த்திலே..."
" இளைய நிலா பொழிகிறது..."
இன்னும் எத்தனை எத்தனைப் பாடல்கள் !
நிலவு ....! நினைத்தாலே குளிர்ச்சியாக் உள்ளது இல்லையா? பல்லாயிரம் ஆண்டுகளாகவே மனிதனுக்கு நல்ல துணையாக இருந்து வந்திருக்கிறது. இரவில் ஒளி கொடுக்கும் விளக்காகவும், கடல் பயணத்தில் திசைக் காட்டியாகவும் காதலர்களுக்கு பல விஷயங்களில் கற்பனையாக ஆறுதலாகவும் இன்றும் இருக்கிறது. உலகின் பல இன மக்களுக்கு அது ஒரு கடவுளாகவும் உள்ளது.இதுவரையில் மனிதன் பூமியைத் தவிர காலடிப் பதித்த ஒரே இடம் இதுதான். மேலும் நாசா விஞ்ஞானிகள் நிலவில் காலனி அமைக்கத் திட்டமிட்டுள்ளனர் என்கிற விஷியம் எல்லோருக்கும் தெரியும்.  அதுவும்  டிசம்பர் 24,2029இல் பூமியை ஒரு விண்வெளிப் பாறைத் தாக்கும் அபாயம் உள்ளதால்,இன்னும் வேகமாகவே வேலைகள் நடக்கிரதாகக் கேள்வி! அந்த ரேசில் நம்ம நாட்டவரும் உள்ளார்கள் எனபது இன்னும் விசேஷம்.அதைப்பற்றி இன்னொருமுறைப் பார்க்கலாம்.

நிலவு, எப்படி அங்கு வந்தது?, ஏன் அங்கு வந்தது?,அதனால் என பயன்? போன்ற பலதரப்பட்ட கேள்விகளுக்கு இந்த வீடியோவில் விடைக் காணலாம் வாருங்கள்.

பூமி என்ற விண்வெளிக்கப்பல்.[Updated]

100 மைல்களுக்கு மேலே இருந்து எடுக்கப்பட்ட பூமியின் முதல் புகைப்படம்.



அது என்ன இப்படி ஒரு தலைப்பு? ஆம். ஹிஸ்டரி சேனல் இந்த வீடியோக்கு இந்தப் பெயர் தான் வைத்துள்ளது. இதில் பூமி பற்றிய எல்லா விஷயங்களையும் அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். அப்படி என்ன நமக்குத் தெரியாதை சொல்லிவிடப் போகிறார்கள் என்று நானும் முதலில் நினைத்தேன். ஆனால் பார்த்தப் பிறகுத் தான் தெரிந்தது 'கற்றது கை மண்' கூட இல்லை என்று. சரி பேசிப் பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம். கண்டு களியுங்கள். கருத்துக் கூறுங்கள். நன்றி.



செவ்வாய், 14 ஜூலை, 2009

சூரியனின் ரகசியங்கள்.[Updated]

அது ஏனோத் தெரியவில்லை, இதுப் போன்ற பதிவுகளைப் போடத்தான் மனம் விரும்புகிறது. கேலியும், கிண்டலும்,வாழ்த்துக்களும்,வசவுகளும்,( அதுவும் ஒரு ஜாலித்தான்.அதுப்போன்றவைகளுக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலரின் பரம ரசிகன் அடியேன் நான்.) நிறைந்த இந்த வலையுலகில், இதுப்போன்ற பதிவுகளுக்கு வரவேற்ப்பு இல்லை என்பது நிதர்சனம். இருந்தாலும் யாரோ ஒருவர் இருவராவது படிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நாம் எல்லோரும் நியூட்டனோ, ஆல்பர்ட் ஐன்ஸ்டைனோ, அல்லது தற்போது வாழும் அறிவுஜீவி ஸ்டீபன் ஹாகிங்க்சோ போல ஆக முடியாது.(முடியுமா?) ஆனால் அவர்களின் அறிவில் ஒரு சிறுத் துளியாவது நாம் பெற முயற்சிக்க வேண்டும். அது போன்ற முயற்சித்தான் இது. பெரியவர்கள் பார்த்தல் மட்டும் போதாது. நம் வீட்டுப் பிள்ளைகளையும் இதுப் போன்றவற்றை பார்க்க ஊக்குவிக்கவேண்டும். என்ன ஒன்று, இதுப்போன்ற அறிவியல் சார்ந்த காணொளிகள் தமிழில் தயாரிக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ? அதுவரையில் காத்திருக்க வேண்டாம். ஆங்கில மொழியில் பார்ப்பதால் அந்த மொழியறிவையும் வளர்த்துக்கொள்ளலாம்.
வலையுலகில் நல்லது கேட்டது எல்லாம் கொட்டிக்கிடக்கிறது. சில அதில் நல்லவைகள் இருக்கும் இடம் எனக்கு கொஞ்சம் தெரியும். அவைகளை பார்த்து நானும் தெரிந்துக்கொண்டு, உங்களுக்கும் காண்பித்துத் தரும் சிறிய முயற்சி இது. அது உங்களை வந்தடைந்ததா என்று உங்களின் கருத்துக்கள் மூலமாக தெரிந்துக்கொள்வேன். ஆகவே சிரமம் பாராமல் ஏதாவது சொல்லுங்கள்.

சூரியன், நம் சூரியக்குடும்பத்தின் தலைவன். அவனுக்குள் எதனை ஆயிரம் ரகசியங்கள். நம் குடும்பத்தின் தலைவரான நம் தந்தையைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டாமா?

சரி நீங்கள் பார்க்க ஆரம்பியுங்கள். மீண்டும் அடுத்த முறை நம் பிரபஞ்சத்தின் மேலும் பல ரகசியங்களை ஆராய்வோம்.